Friday, October 12, 2007

SMS மூலம் ரயில் பயணச்சீட்டு

SMS மூலம் ரயில் பயணச்சீட்டு ரயில்வே அமைச்சகம் திட்டம்

ரயில் பயணச் சீட்டை SMS மூலம் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த ரயில்வே அமைச்ச கம் பரிசீலித்து வருகிறது.
முன்பதிவு செய்யப்படாத பயணச் சீட்டுகளை வாங்க ரயில் நிலையங்களில் பயணி கள் நீண்ட வரிசையில் நிற்க நேர்கிறது. இதைத் தவிர்க்கும் வகையில் எஸ்.எம்.எஸ். மூலம் பயணச் சீட்டு பெறும் வசதியை அறிமுகப்படுத்த ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் முன் பதிவு செய்யப்படாத பயணச் சிட்டை வாங்க செல்பேசியில் இருந்து ரயில்வே துறைக்கு ஒரு SMS அனுப்ப வேண்டும். அதில் நாம் புறப்படும் ஊர், செல்ல வேண்டிய ஊர், எத்தனை பயணச்சீட்டு வேண்டும்? மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள் இடம் பெற வேண்டும்.

சிறிது நேரத்தில் ரயில்வே துறை இ-டிக்கெட் ஒன்றை SMS மூலம் அனுப்பும். அதில், புறப்படும் ஊர், செல் லும் ஊர், பயணிகள் எண் ணிக்கை ஆகிய விவரங்கள் இடம் பெற்றிருக்கும்.
இந்த SMS தான் பயணச்சீட்டு. ரயில்வே பயணச் சீட்டு பரிசோதகர் கேட்கும் போது செல்பேசியில் உள்ள SMS சை அவரிடம் காட்டினால் போதும்.

என் வழி தனி வழி

போலீஸ் ஸ்டோரி உள்ளிட்ட பல்வேறு படங்களில் தன்னுடைய சாகசம் மற்றும் நகைச்சுவை கலந்த நடிப்பின் மூலம் உலகெங்கிலும் உள்ள ரசிகர்களின் மனங்கவர்ந்தவர் ஜாக்கிசான். ஆசிய சூப்பர் ஸ்டார் என்று போற்றப்படும் இவரது மகன் ஜாய்சிசான் இப்போது நடிக்க வந்திருக்கிறார் நடிப்புத்துறையில் தனக்கென தனி பாதையை வகுத்துக் கொள்வேன் என்று கூறியிருக்கிறார் ஆசிய சூப்பர் ஸ்டார் ஜாக்கிசானின் மகன் ஜாய்சிசான்.

ஜாய்சிசான் நடித்துள்ள தி சன் ஆல்சோ ரைசஸ் எனும் திரைப்படம் வெனிஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டுள்ளது. தந்தையை போல அதிரடி படங்களில் நடிக்காமல் அவர் கலைப்படம் ஒன்றில் நடித்திருக்கிறார். ஜாக்கிசானின் மகன் என்ற முறையில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள ஜாய்சி திரைப்பட உலகில் தனக்கென தனிப்பாதை வகுத்துக் கொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

5000 ரூபாயில் கம்ப்யூட்டர்!

ஐந்து ஆயிரம் ரூபாய்க்கு அதிலும், இன்டெர்நெட் வசதியோடு கூடிய கம்ப்யூட்டரை "நொவாட்டியம்' நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. கையை கடிக்காத விலையில் கம்ப்யூட்டரை வாங்கி பயன்படுத்த வேண்டும் எனும் நடுத்தர மக்களின் கனவை நினைவாக்கும் வகையில் சென்னையைச் சேர்ந்த நொவாட்டியம் நிறுவனம் அறிமுகம் செய்திருக்கிறது.

கம்ப்யூட்டர் என்பது வசதி படைத்தவர் மட்டுமே பயன்படுத்தலாம் என்னும் நிலைமாறி, கடந்த சில ஆண்டுகளில் அவற்றின் விலை பெருமளவு சரிந்திருக்கிறது என்ற போதிலும், ஓரளவுக்கு நினைவு திறன், சமீபத்திய சாப்ட்வேர், அதற்கு ஈடுகொடுக்கக் கூடிய ஹார்டுவேர்டு வசதி ஆகியவற்றை கொண்ட நன்றாக செயல்படக் கூடிய கம்ப்யூட்டரின் விலை சராசரியாக 30 ஆயிரம் ரூபாய்க்கு வந்து விடுகிறது.குறைந்த வருமானம் கொண்ட நடுத்தர மக்களுக்கு இது பெரிய தொகையாகவே இருக்கிறது. கீழ் நடுத்தர மக்களை பற்றி சொல்லவே வேண்டாம். ஆனால் எல்லா தரப்பினருக்குமான கம்ப்யூட்டர் தேவை என்பது ஒன்றாகவே இருக்கிறது.அதிலும் உலகம் தகவல் தொழில்நுட்ப யுகத்தில் அடியெடுத்து வைத்து நவீன பாதையில் பயணித்து வரும் நிலையில், எல்லா விஷயங் களுக்கும் கம்ப்யூட்டர் தேவைப்படுகிறது.

இந்நிலையில் சாதாரண மக்களுக்கும் கம்ப்யூட்டரை வாங்கி பயன்படுத்தக் கூடிய வகையில் சென்னையைச் சேர்ந்த நொவாட்டியம் நிறுவனம் ரூபாய் 5 ஆயிரம் விலைக்கு (ரூ.4999) தன்னுடைய கம்ப்யூட்டரை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. குறைந்த விலைக்கு கம்ப்யூட்டரை விற்பதாக பல நிறுவனங்கள் கூறிவருகின்றன என்றாலும் 5 ஆயிரம் ரூபாய்க்கு கம்ப்யூட்டர் சாத்தியமா என்ற கேள்வி எழலாம். இது உண்மைதானா என்ற நம்ப முடியாத உணர்வும் ஏற்படலாம்.இது உண்மைதான். சாதாரண கம்ப்யூட்டர்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்பதால் இதனை குறைந்த விலைக்கு விற்க முடிகிறது. வேறுபட்ட கம்ப்யூட்டர் என்றாலும், சாதாரண கம்ப்யூட்டரில் செய்யக் கூடிய அனைத்து பணிகளையும் இந்த கம்ப்யூட்டர் மூலம் நிறைவேற்றி கொள்ளலாம்.பொதுவாக தற்போது அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர்கள், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் என்று குறிப்பிடப்படுகின்றன. மானிட்டர், விசைப்பலகை ஆகிய பிரிக்க முடியாத அங்கங்களோடு வரும் இந்த கம்ப்யூட்டரின் உயிர்நாடி சிபியூ என்று சொல்லப்படும் மைய சாதனத்தில் இருக்கிறது. நினைவு திறன், செயல்பாட்டு திறன், சாப்ட்வேர் ஆகிய எல்லாவற்றையும் இந்த பகுதியே தாங்கி நிற்கிறது.ஒரு கம்ப்யூட்டரை உருவாக்க பெரும் செலவு இந்த சாதனத்தை நோக்கியே செல்கிறது. ஒரு கம்ப்யூட்டரின் செயல் திறனை அதிகரிக்க வேண்டும் என்றால், இதன் செலவும் அதிகரிக்கும். டெஸ்க்டாப் கம்ப்யூட்டருக்கு மாற்றாக மற்றொரு கம்ப்யூட்டர் கருத்தாக்கம் முன்வைக்கப்படுகிறது.நெட்வெர்க் டிசி என்று அதன் பெயர். நினைவுத்திறனுக்கு சிபியூவை சார்ந்திருக்காமல், மையசர்வர் ஒன்றின் மூலம் தனக்குத் தேவையான ஆற்றலை பெற்று செயல்படக் கூடிய கம்ப்யூட்டர்கள் நெட்வெர்க் பிசி ரகமாக கருதப்படுகிறது. அதாவது சர்வசக்தி படைத்த ஒரு மைய சர்வரின் ஆற்றலை எண்ணற்ற கம்ப்யூட்டர்கள் பகிர்ந்து கொள்வது நெட்வெர்க் பிசி மூலம் சாத்தியமாகிறது. இந்த நெட்வெர்க் பிசி கருத்தாக்கத்தின் அடிப்படையில், நொவாட்டியம் நிறுவனம் தன்னுடைய நொவாட் நெட்பிசி கம்ப்யூட்டரை அறிமுகம் செய்திருக்கிறது.எல்லா கம்ப்யூட்டர்களிலும் இருப்பது போல இதில் மானிட்டர் மற்றும் விசைப்பலகை உண்டு. ஆனால் சிபியூ கிடையாது. அதற்கு பதிலாக மைய சர்வருடன் தொடர்பு கொள்ளக் கூடிய செட்டாப் பாக்ஸ் போன்ற ஒரு பாக்ஸ் மட்டும் உண்டு. இந்த பாக்ஸ் மூலம் மைய சர்வரின் ஆற்றலை பெற்று கம்ப்யூட்டர் இயங்கும். இதன் காரணமாக இந்த கம்ப்யூட்டரின் தயாரிப்பு செலவை கணிசமாக குறைந்து விடுகிறது. அது மட்டுமல்லாமல் இந்த கம்ப்யூட்டருக்கு தனியே சாப்ட்வேர் எதுவும் தேவையில்லை. எல்லாமே மையசர்வரின் வசம் உள்ளது. எனவே புதிய தேவைக்காக சாப்ட்வேரை அப்டேட் செய்து கொள்ள வேண்டிய அவசியமும் கிடையாது. அதோடு சாப்ட்வேர் மூலம் பரவக்கூடிய வைரஸ்பாதிப்புகள் பற்றிய கவலையும் தேவையில்லை. மேலும் மின் சக்தி பயன்பாடும் குறைவாகவே இருக்கும். இதெல்லாம் நொவா நெட்பிசியின் சாதகமான அம்சங்கள்.மற்றபடி சாதாரண கம்ப்யூட்டரை பயன்படுத்துவது போலவே இதனை பயன்படுத்தலாம்.

இமெயில் அனுப்புவது, இன்டெர்நெட்டில் உலாவி தகவல்களை பெறுவது உள்ளிட்ட அனைத்து விஷயங் களையும் இதன் மூலம் நிறைவேற்றி கொள்ளலாம். இந்த நெட்வேர்க் பிசி மையசர்வரோடு கேபிள் மூலம் இணைக்கப்படுகிறது. இன்டெர்நெட் இணைப்பும் இந்த கேபிள் மூலமே கிடைத்து விடும், எனவே தனியே இன்டெர்நெட் வசதி தேவையில்லை. ஆனால் மாதாந்திர கட்டணமாக ரூ. 499 செலுத்த வேண்டும். மையசர்வரின் சேவையை பயன்படுத்துவது மற்றும் இன்டெர்நெட் வசதி உள்ளிட்ட அனைத்துக்குமான தொகை இது.

சென்னை ஐஐடியில் படித்த அசோக் ஜூன்ஜூன்வாலா, ராஜேஷ் ஜெயின் உள்ளிட்ட தன்னுடைய நண்பர்களோடு இணைந்து சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நிறுவனத்தை நிறுவினார். இந்தியாவில் உள்ள சாமான்ய மனிதர்கள் பயன்படுத்தக் கூடிய கம்ப்யூட்டரை உற்பத்தி செய்ய வேண்டும் என்னும் நோக்கில், இந்த நிறுவனத்தை அவர் துவக்கினார். தொழில்நுட்ப மாநாடு ஒன்றில் பங்கேற்ற போது, கம்ப்யூட்டர் மற்றும் தகவல் தொழில்நுட்ப புரட்சிகளி லிருந்து விலகியிருக்கும் பெரும் பாலானவர்களிடம் கம்ப்யூட்டரை கொண்டு சேர்க்க வேண்டும் என்னும் உந்துதல் அவருக்கு ஏற்பட்டது. அதன் விளைவாக பிறந்ததே நொவாட்டியம் நிறுவனம். அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் 5 கோடி கம்ப்யூட்டர்களை விற்று, கம்ப்யூட்டர் புரட்சி செய்ய வேண்டும் என இந்நிறுவனம் விரும்புகிறது. இதன் முதல் கட்டமாக சென்னையில் கே.கே.நகர் பகுதியில் நொவாநெட்பிசி, 100க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு விற்கப்பட்டு, கேபிள் மூலம் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.இந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் இதற்கு சிறப்பான வரவேற்பு அளித்துள்ளனர். இந்த கம்ப்யூட்டர் நம்ப முடியாத விலையில் கிடைப்பது குறித்து அவர்கள் வியப்பை வெளிப்படுத்தியுள்ளனர். பலருக்கு முதல் முறையாக கம்ப்யூட்டரை பயன்படுத்தும் அனுபவத்தை இது ஏற்படுத்தி தந்திருக்கிறது. அடுத்ததாக அரசு பள்ளிகள் மற்றும் பிற நகரங்களில் இந்த கம்ப்யூட்டர் அறிமுகம் செய்யப்பட உள்ளது. சென்னையைப் போலவே டெல்லியில் இந்த கம்ப்யூட்டர் சந்தைப்படுத்தப்பட உள்ளது. தற்போது கேபிள் மூலம் வழங்கி வரும் இணைப்பை எதிர்காலத்தில் தொலைபேசி மூலம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.இந்நிறுவனத்தின் தயாரிப்பு சர்வதேச இதழ்கள் உள்ளிட்ட பல பத்திரிகைகளின் பாராட்டை பெற்றுள்ளது. சென்னையில் இந்த கம்ப்யூட்டரை மக்கள் மத்தியில் அறிமுகமாக்கி பிரபலமாக்கும் பொறுப்பை இதன் மார்க்கெட்டிங் பிரிவு துணைத் தலைவர் ராஜேஷ்வரி ஏற்று கொண்டுள்ளார்.

நோவாநெட்பிசியை எளிமையான கம்ப்யூட்டர் என்று சொல்ல வேண்டும். இந்த கம்ப்யூட்டரின் சாப்ட்வேர் தேவைக் காக மைக்ரோ சாப்ட் நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது. எனவே மைக்ரோசாப்ட்டின் பிரபல மான சாப்ட்வேர்களை இதில் பயன் படுத்தலாம். அதோடு கல்விக்கான மைக்ரோசாப்ட்டின் பிரத்யேக சாப்ட்வேரையும் நோவாநெட்பிசி வாடிக்கையாளர்கள் பயன்படுத்த முடியும். இதோடு இன்டெர்நெட் மூலம் டவுன்லோடு செய்துகொள்ளும் வசதியும் இதில் உண்டு. ஆனால் இதில் சிடி டிரைவ் கிடையாது. எனவே இதில் சிடியை போட்டு படம் பார்ப்பது சாத்தியமில்லை. எளிமையான செயல்பாட்டை கொண்டிருக்க வேண்டும் என்பதால், திட்டமிட்டு சிடி வசதி தவிர்க்கப் பட்டுள்ளது. அதோடு கல்வி தேவைக்காக கம்ப்யூட்டர் வாங்குபவர்களுக்கு இந்த குறை ஒரு சாதகமான அம்சமாகவே தெரியும்.