Thursday, January 31, 2008

சென்னையில் எச்சில் துப்பினால் அபராதம்!- சாத்தியப்படுமா?

இனிமேல் சென்னைக்காரர்கள் குப்பை கொட்டுவதில் விழிப்புடன் இருக்க வேண்டும். இல்லை யேல் தண்டத் தொகை கட்ட வேண்டும்.

இது தெடார்பான தீர்மானம் சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. சென்னையை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.



எச்சில் துப்புவது, சிறுநீர் கழிப்பது, மலம் கழிப்பது போன்றவற்றைப் பொது இடங்களில் செய்யக்கூடாது. செய்தால் 50 ரூபாய் தண்டம். குப்பைகளை மட்கும் குப்பை, மட்காத குப்பை என்று பிரித்து அதற்குரிய இடத்தில் கொட்ட வேண்டும். அப்படிச்செய்யா விட்டால் 500 ரூபாய் தண்டம்.

தங்களது வீட்டின் வெளிப் பகுதியை சுத்தமாக வைக்காத வீட்டின் உரிமையாளர்களுக்கு ரூ. 1,000 அபராதம் விதிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.



பான்பராக் போன்ற வஸ்துகளை மென்று சாலைகளை 'ரத்தக் களறியாக்கி' (ரத்தக் கலராக்கி) வைப்போருக்கு இந்த தண்டனை மிக மிக அவசியமான ஒன்று தான். சவுக்கார்பேட்டையிலிருந்து கண்டிப்பாக எதிர்ப்பு கிளம்பும்.

ஆனால், பொதுக் கழிப்பிடங்களை முதலில் மாநகராட்சி சுத்தமாக வைத்தால் தான் சிறுநீர் கழிக்க மக்கள் உள்ளே போவார்கள். கழிப்பிடத்தின் வெளிப்பகுதி உள் பகுதியை விட 'சுத்தமாக' இருந்தால் மக்கள் எப்படி உள்ளே காலடி வைப்பார்கள் என்பதை மாநகராட்சி யோசிக்க வேண்டும்.

பெருமளவில் குப்பைகளைக் கொட்டும் நிறுவனங்கள் அதற்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் குப்பைகளைக் கொட்ட வேண்டும். தவறினால் 500 ரூபாய் தண்டம். குப்பைகளை எரித்தாலும் 500 ரூபாய் தண்டம் விதிக்கப்படும்.

அனைவறும் முன்வந்து ஒத்துழைப்பு தருவார்களா? அல்லது 'அவன நிறுத்த சொல்லு நான் நிறுத்துறேன்' என்பார்கள? இந்த சட்டம், தீர்மானம் எந்த அளவுக்கு சாத்தியப்படும், பொறுத்திறுந்து பார்போம்!.

Saturday, January 19, 2008

படித்ததில் பிடிக்காதது (?)

கீழே உள்ள 2 செய்திகளும் (19- ஜனவரி 2008)இனைய இதழ் ஒன்றில் படித்த செய்தி, இந்த 2 செய்திகளுக்கும் அவர்கள் சார்ந்த மதங்களுக்கும் எந்த தொடர்பும் இருக்காது என்று நம்புகிறேன். -நன்றி தட்ஸ்தமிழ்.காம்

(1).பணத்துக்காக 21 கொலைகள்.. சீரியல் கில்லர் குடும்பத்தோடு கைது



பெங்களூரில் பணத்துக்காக 21 கொலைகள் செய்து தலைமறைவாக இருந்த நபர் 30 ஆண்டுகளுக்கு பின் போலீசில் குடும்பத்துடன் பிடிபட்டுள்ளார்.

இந்தக் குடும்பம் மேலும் பலரையும் கொன்றிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

பெங்களூர், கெம்பே கவுடா நகரை சேர்ந்தவர் ராகவன் (62). ஓய்வு பெற்ற என்ஜீனியரான இவர் ஹென்னூர் எச்.பி.ஆர் லே-அவுட்டில் உள்ள தனது வீட்டை சந்திரகாந்த் சர்மா (48) என்பவருக்கு வாடகைக்கு விட்டிருந்தார்.

சந்திரகாந்த், தனது மனைவி ஹர்ஷா, மகன் மண்டோ சர்மா ஆகியோருடன் வசித்து வந்தார்.

கடந்த 9ம் தேதி சந்திரகாந்த் வீட்டுக்கு வாடகை வாங்கச் சென்ற ராகவன் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த ராகவனின் மகன் மாதவன் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் ராகவனை தேடி வந்த நிலையில், கிருஷ்ணகிரி அருகே அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஒன்று கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அது காணாமல் போன ராகவன் எனத் தெரிய வந்தது.

உடனே கெம்பேகவுடா நகர் போலீசார் ராகவன் இறந்தது குறித்து அவரது வீட்டில் குடியிருக்கும் சந்திரகாந்த் சர்மாவிடம் சாதாரணமாக விசாரித்தனர்.

ஆனால், சந்திரகாந்த் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறவே, அவருடைய வீட்டை போலீசார் சோதனை நடத்தினர்.

அப்போது ராகவனுக்கு சொந்தமான வீட்டுக்குரிய ஆவணங்களை போலியாக தயாரித்து அவருடைய மகன் மாதவனின் கையெழுத்தையும் போலியாக போட்டு தயார் செய்யப்பட்டிருந்த பத்திரம் சிக்கியது.

சந்திரகாந்த் மகா மோசடி பேர்வழி என்பதை உணர்ந்த போலீசார், அவரது மனைவி ஹர்ஷா, மகன் மண்டோ சர்மா ஆகியோரிடமும் விசாரணை நடத்தினர்.

அப்போது ராகவனை கொலை செய்ததை சந்திரகாந்த் குடும்பத்தினர் ஒப்புக்கொண்டனர். அதிர்ச்சியடைந்த போலீசார் இவர்களிடம் மிகத் தீவிரமாக பல தகவல்களை கொட்டினர்.

ராகவனுக்கு சொந்தமான வீட்டை போலி பத்திரம் தயாரித்து ரூ. 1.5 கோடிக்கு ஒருவருக்கு விற்று அதற்கு முன் தொகையாக ரூ.50 லட்சம் அட்வான்சும் வாங்கியுள்ளார் சந்திரகாந்த்.

இது தவிர பெங்களூர் உட்பட பல இடங்களில் போலியாக பத்திரங்கள் தயாரித்து ஏகப்பட்ட நிலங்களை விற்று அதன் மூலம் இதுவரை ரூ.15 கோடி அளவுக்கு மோசடி செய்துள்ளதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பெரிய மோசடி குடும்பம் என்றரீதியில் இவர்களை விசாரித்த போலீசாருக்கு இவர்கள் மேலும் பல கொலைகளையும் செய்திருக்கக் கூடும் என்ற சந்தேகம் தட்டவே, அவர்களை லாக்-அப்புக்கு கொண்டு சென்று முறைப்படி கவனித்தனர்.

அப்போது தான் இவர்களது சீரியல் கொலைகள் வெளிச்சத்துக்கு வந்தன.

21 கொலைகள்..

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் நகரை சேர்ந்த சந்திரகாந்த் பணத்துக்காக கடந்த 1978ம் ஆண்டு முதல் 1981ம் ஆண்டு வரை 20 கொலைகளை செய்துள்ளான் எனத் தெரியவந்தது.

எல்லா கொலைகளையும் நாசிக்கில் தான் செய்துள்ளான்.

அதன் பின்னர் பெங்களூருக்கும் இடம் மாறி வந்து ரியல் எஸ்டேட் தொழிலை ஆரம்பித்துள்ளான். அதில் பலரை ஏமாற்றியுள்ளான்.

தான் வாடைகைக்கு இருந்த வீட்டையும் போலி ஆவணம் கொண்டு விற்க முடிவு செய்தபோது தான் வீட்டின் உரிமையாளர் ராகவன் தடையாக வந்து நிற்கவே அவரையும் கொலை செய்துள்ளான்.

அவரது இந்த கொலைகளுக்கு மனைவியும், மகனும் துணையாக இருந்ததாகத் தெரிகிறது.

இந்தக் கும்பல் மேலும் பலரைக் கொன்றிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-**-*-*-*-*-*-

(2)10 வயது சிறுமியை கற்பழித்த டாக்டர் கைது

மும்பை யில் 10 வயது சிறுமியை கற்பழித்த டாக்டரும் அவருக்கு உதவி செய்த கம்பவுண்டரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மும்பை, கொரகாவ்ன் பகுதியைச் சேர்ந்தவர் டாக்டர் ஆர்.எஸ்.திவாரி. இவர் தனது மருத்துவமனையின் காம்பவுண்டுக்குள் விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமியை உள்ளே அழைத்து வருமாறு கம்பவுண்டர் சங்கர் மோரேவிடம் கூறியுள்ளார்.

சிறுமியை கம்பவுன்டர் மோரே ஏமாற்றி உள்ளே அழைத்து வந்துள்ளார். இதையடுத்து மருத்துவமனைக்குள் வைத்து அந்த சிறுமியை திவாரி கற்பழித்துள்ளார்.

இது குறித்து சிறுமி பெற்றோரிடம் தெரிவிக்கவே, அவர்கள் போலீசில் புகார் கொடுத்தனர்.

போலீசார் டாக்டரை இன்று கைது செய்தனர். கற்பழிக்கப்பட்ட சிறுமி பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.