Friday, October 12, 2007

SMS மூலம் ரயில் பயணச்சீட்டு

SMS மூலம் ரயில் பயணச்சீட்டு ரயில்வே அமைச்சகம் திட்டம்

ரயில் பயணச் சீட்டை SMS மூலம் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த ரயில்வே அமைச்ச கம் பரிசீலித்து வருகிறது.
முன்பதிவு செய்யப்படாத பயணச் சீட்டுகளை வாங்க ரயில் நிலையங்களில் பயணி கள் நீண்ட வரிசையில் நிற்க நேர்கிறது. இதைத் தவிர்க்கும் வகையில் எஸ்.எம்.எஸ். மூலம் பயணச் சீட்டு பெறும் வசதியை அறிமுகப்படுத்த ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் முன் பதிவு செய்யப்படாத பயணச் சிட்டை வாங்க செல்பேசியில் இருந்து ரயில்வே துறைக்கு ஒரு SMS அனுப்ப வேண்டும். அதில் நாம் புறப்படும் ஊர், செல்ல வேண்டிய ஊர், எத்தனை பயணச்சீட்டு வேண்டும்? மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள் இடம் பெற வேண்டும்.

சிறிது நேரத்தில் ரயில்வே துறை இ-டிக்கெட் ஒன்றை SMS மூலம் அனுப்பும். அதில், புறப்படும் ஊர், செல் லும் ஊர், பயணிகள் எண் ணிக்கை ஆகிய விவரங்கள் இடம் பெற்றிருக்கும்.
இந்த SMS தான் பயணச்சீட்டு. ரயில்வே பயணச் சீட்டு பரிசோதகர் கேட்கும் போது செல்பேசியில் உள்ள SMS சை அவரிடம் காட்டினால் போதும்.

No comments: