Saturday, February 28, 2009

நாடாளுமன்ற தேர்தலுக்காக செலவிடப்படும் தொகை ரூ.10 ஆயிரம் கோடி மட்டும் தான்!

நாடாளுமன்ற தேர்தலுக்காக செலவிடப்படும் தொகையான ரூ.10 ஆயிரம் கோடி, அமெரிக்க அதிபர் தேர்தலுக்காக செலவிடப்பட்ட தொகையை விட அதிகமானதாக இருக்கும் என கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் செய்த செலவுகள் இந்திய ரூபாயின் மதிப்பில் சுமார் 8 ஆயிரம் கோடி ரூபாய்.


சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின்படி தற்போது நடைபெற உள்ள லோக்சபா தேர்தலுக்கான செலவு ரூ.10 ஆயிரம் கோடி. இதில் ரூ.2,500 கோடி வாக்களிக்கும் மக்களுக்கு அளிப்பதற்காக செலவிடப்படுகிறதாம்.


நாடாளுமன்ற தேர்தலுக்காக தற்போது செலவிடப்பட உள்ள தொகையும் கடந்த தேர்தலை விட இரண்டு மடங்காகும் என்பது குறிப்பிடத்தக்கது.


கடந்த நாடாளுமன்ற தேர்தலில் செலவிடப்பட்ட ரூ.4500 கோடியே வரலாற்றிலேயே அதிகமானதாக கருதப்படுகிறது.

Saturday, November 22, 2008

12 வயது மாணவர் ஒரே சமயத்தில் 200 பேருடன் விளையாடி சாதனை.

புதுச்சேரியில் நடந்த மெகா செஸ் போட்டியில், 12 வயது மாணவர் ஒரே சமயத்தில் 200 பேருடன் விளையாடி புதிய சாதனை படைத்தார். புதுச்சேரி குயவர்பாளையம் சுந்தர மேஸ்திரி வீதியைச் சேர்ந்த சையத் நயீம் - ஜரீனாபேகம் தம்பதியரின் மகன் முகமது ஜாவித்(12). உழவர்கரை பிரிம்ரோஸ் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். செஸ் விளையாட்டில் திறமை மிக்கவர். முகமது ஜாவித்தின் திறமையை வெளிப்படுத்தும் வகையில், ஒரே நேரத்தில் 200 மாணவர்களுடன் விளையாடும் "மெகா செஸ் போட்டி' உழவர்கரை பிரிம்ரோஸ் பள்ளியில் நேற்று நடந்தது.
அதே பள்ளியில் பயிலும் ஐந்து வயது முதல் 14 வயது வரையுள்ள 200 மாணவ- மாணவிகள் போட்டியில் பங்கேற்றனர். கல்வித்துறை இயக்குனர் சுந்தரவடிவேலு போட்டியைத் துவக்கி வைத்தார். காலை 11 மணிக்கு போட்டி துவங்கியது. பிரமாண்ட அரங்கில் நடந்த போட்டியில் ஒவ்வொரு வீரருக்கும் எதிராக கவனமாகவும், நிதானமாகவும் சில நொடிகளில் காய்களை நகர்த்தி, எந்த டென்ஷனும் இல்லாமல் படிப்படியே எதிர்த்து விளையாடிய வீரர்களை வீழ்த்தினார். இரவு 7 மணிக்கு போட்டி முடிவடைந்தது.
போட்டியில் பங்கேற்ற 200 பேரில் 189 போட்டியாளர்களை வீழ்த்தினார். ஐந்து பேரிடம் தோல்வியைத் தழுவினார். ஆறு பேரிடம் போட்டியை சமன் செய்தார். முகமது ஜாவித்தை புதுச்சேரி காஸ்மாஸ் ரோட்டரி சங்க தலைவர் செல்வநாதன், செயலர் வீரமணி, பள்ளி இயக்குனர் லெஸ்லி ஜேக்கப், முதல்வர் ஜரினாபேகம் வாழ்த்தினர். புதுச்சேரி காஸ்மாஸ் ரோட்டரி சங்கம் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது.

Saturday, July 5, 2008

அமெரிக்க அணுசக்தி

அமெரிக்க அணுசக்தி உடன்பாட்டில் கையெழுத்துப் போட அனுமதிக்க வேண்டும். இல்லையென்றால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்வேன்' என்று மன்மோகன் சிங் சோனியாவையே அச்சுறுத்தினார் என்று செய்திகள் வந்தன. அணுசக்தி உடன்பாட்டில் இனியும் காலதாமதம் செய்யாது இந்தியா கையெழுத்திட வேண்டும் என்று வாரம் ஒருமுறை வாஷிங்டன் ஆலோசனை சொல்கிறது. அச்சுறுத்தவும் செய்கிறது. தமது பதவிக்காலம் முடிவதற்குள் இந்தியாவை அமெரிக்காவின் ராணுவக் கூட்டாளியாக்கிட வேண்டும் என்று புஷ்ஷும் துடித்துக் கொண்டிருக்கிறார்.

ஒசாமா பின்லேடனை உயிரோடு பிடிப்பது - படை கொண்டு ஈரானை ஆக்கிரமிப்பது - இந்தியாவை தமது ராணுவக் கூட்டணி நாடாக்குவது ஆகியவையெல்லாம் புஷ்ஷின் பதவிக் கால லட்சியங்கள். இவற்றில் எதுவுமே நிறைவேறவில்லையென்றால், அவர்தான் என்ன செய்வார்? ஒசாமா பின்லேடனைப் பிடிக்க ஆப்கனிஸ்தானில் முகாமிட்டிருக்கும் அமெரிக்கக் கூட்டணி ராணுவம் நல்லபடியாக உதை வாங்கிக் கொண்டிருக்கிறது. அவர் பாகிஸ்தான் மலைப் பிரதேசத்தில் பதுங்கியிருப்பதாக அந்த நாட்டிற்குள்ளும் புகுந்து அந்த ராணுவம் குண்டு மாரி பொழிகிறது. அதனைப் பகிரங்கமாக பாகிஸ்தானே கண்டிக்கின்ற நிலை உருவாகி இருக்கிறது.


ஈராக் மீது படை கொண்டு செல்ல புஷ் சொன்ன அத்தனை காரணங்களும் பொய் என்று அமெரிக்க செனட் சபையே கண்டித்து இருக்கிறது. எனவே, ஈரானும் அணுகுண்டு செய்வதாகக் கூறி அமெரிக்க புஷ்ஷால் படைகளை ஏவ முடியவில்லை. ஈரானுக்கு ஆதரவாக ரஷியாவும் சீனமும் நிற்கின்றன.
எனவே, தொட்டதெல்லாம் தோல்வி என்ற நிலையில் எப்படியாவது அணுசக்தி உடன்பாட்டில் இந்தியாவைக் கையெழுத்திடச் செய்யவேண்டும் என்று புஷ் துடித்துக் கொண்டிருக்கிறார். மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் அந்த உடன்பாடு ஏற்படவில்லையென்றால், வேறு யார் ஆட்சிக் காலத்தில் நிறைவேறும்? அந்தரங்கமாக நடமாடிக் கொண்டிருந்த அமெரிக்க அணுசக்தி உடன்பாட்டை இடதுசாரிக் கட்சிகளும், தேச பக்த சக்திகளும் அம்பலத்திற்குக் கொண்டு வந்தன. அந்த உடன்பாடு எப்படி அமெரிக்காவிற்கு இந்தியா எழுதித் தரும் அடிமைச் சாசனமாக அமைந்திருக்கிறது என்பதனை எடுத்துக் கூறின.
அதற்கு இன்றுவரை பிரதமர் மன்மோகன் சிங் விளக்கம் தரவில்லை. `அந்த உடன்பாட்டை ஏற்கெனவே ஒப்புக் கொண்டு விட்டேன். கையெழுத்திட வில்லையென்றால் இனி உலகம் நம்மை நம்பாது' என்கிறார்.

அந்த உடன்பாடு செயலுக்கு வரவில்லையென்றால், இந்தியாவே இருளில் மூழ்கிவிடும் என்று இன்னொரு பக்கம் பிரசாரம் நடைபெறுகிறது. இப்படி பக்க வாத்தியங்கள் பலமாக ஒலிக்க ஆரம்பித்திருக்கின்றன.இந்தச் சூழலில் மூன்று இந்திய விஞ்ஞானிகள் அமெரிக்க அணுசக்தி உடன்பாட்டின் மீது சந்தேகம் தெரிவித்திருக்கின்றனர். ஒருவர், கோபாலகிருஷ்ணன். இந்த அணு விஞ்ஞானி அணுசக்தியை எரிபொருளாகப் பயன்படுத்தும் ஒழுங்கு முறை ஆணையத்தின் தலைவராகப் பணி செய்தவர். இன்னொருவர், பி.கே. அய்யங்கார். இந்த விஞ்ஞான மேதை அணுசக்தி ஆணையத்தின் முழுப் பொறுப்பையும் ஏற்றிருந்தவர்.அடுத்தவர், ஏ.என். பிரசாத். இவர் பாபா அணுமின் நிலைய ஆராய்ச்சித் துறையின் தலைவராகப் பணி செய்தவர்.


அமெரிக்க அணுசக்தி உடன்பாடு பற்றி சரியான தீர்ப்புச் சொல்ல தகுதி பெற்றவர்கள். `ஆராய்ந்து பார்க்காது அணுசக்தி உடன்பாட்டில் இந்தியா கையெழுத்திடக் கூடாது' என்று இவர்கள் இந்த வாரம் எச்சரித்திருக்கிறார்கள். தலைசிறந்த இந்த மூன்று அணு விஞ்ஞானிகளும் சேர்ந்து கூட்டறிக்கையே வெளியிட்டிருக்கிறார்கள்.

`அமெரிக்க அணுசக்தி உடன்பாட்டில் கையெழுத்துப் போடுவேன். இல்லையேல் பதவி துறந்து பரதேசம் போவேன்' என்று மன்மோகன் சிங் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் தருணத்தில் - தக்க சமயத்தில் இந்த மூன்று அணு விஞ்ஞானிகளும் எச்சரித்திருக்கிறார்கள்.
நாட்டின் நலன் மீது அக்கறையுள்ள ஆட்சியாளர்கள் என்ன செய்வார்கள்? இத்தகைய விஞ்ஞானப் பெருமக்களை அழைத்துப் பேசுவார்கள். உடன்பாடு எப்படிப் பாதகம் எனக் கருதுகிறார்கள் என்று விளக்கம் கேட்பார்கள்.

ஆனால், அத்தகைய நடைமுறைகளை மன்மோகன் சிங் அரசு கடைப்பிடிப்பதாகத் தெரியவில்லை. இந்த மூன்று விஞ்ஞானிகளும் என்ன அரசியல்வாதிகளா? இடதுசாரிக் கட்சியினரா? இல்லை. அவர்கள் நாட்டுப் பற்றாளர்கள். எனவே, அமெரிக்க உடன்பாட்டின் அபாயத்தை எடுத்துச் சொல்கிறார்கள். சிந்தித்துச் செயல்படுங்கள் என்று எச்சரிக்கிறார்கள். `அமெரிக்கா நீட்டும் அணுசக்தி உடன்பாட்டில் இந்தியாவிற்கு எதிரான அம்சங்கள் பதுங்கியிருக்கின்றன. அறியாமல் உடன்பாட்டில் கையெழுத்திட்டால் இந்தியாவிற்குப் பேரிழப்பு ஏற்படும். எனவே, உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கு மத்திய அரசு அவசரப்படக்கூடாது' என்று மூன்று மூத்த விஞ்ஞானிகளும் எச்சரித்திருக்கிறார்கள்.

இதனைத்தான் இவ்வளவு காலமாக இடதுசாரிக்கட்சிகள் சுட்டிக் காட்டி வருகின்றன. அந்த அபாயத்தை இப்போது அனுபவ முதிர்ச்சி பெற்ற அணு விஞ்ஞானிகள் எடுத்துக் கூறியிருக்கிறார்கள். ஆனால், உடன்பாட்டில் கையெழுத்துப் போடு போடு என்று அமெரிக்கா நச்சரிக்கிறது. பிரதமர் மன்மோகன் சிங்கும் பேனா மூடியைத் திறந்து தயாராக இருக்கிறார். அப்படிக் கையெழுத்திட்டால் என்ன நிலை ஏற்படும்? பிள்ளை வரம் கேட்கப் போய் கணவனை இழந்த கதையாகிவிடும்.

இந்தியா அணுகுண்டு சோதனை செய்வதை எந்த சக்தியாலும் கட்டுப்படுத்த முடியாது. ஏற்கெனவே இந்தியா அணுகுண்டு சோதனை செய்தபோது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்தது. அமெரிக்காவிடம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அணுகுண்டுகள் இருக்கின்றன. அதனைவிட சக்தி வாய்ந்த அழிவு ஆயுதங்களை அந்த நாடு தொடர்ந்து தயாரித்து வருகிறது. அதற்கான சோதனைகள் நடைபெறுகின்றன.

அரபு நாடுகளை அச்சுறுத்துவதற்காக அமெரிக்கா உருவாக்கிய இஸ்ரேல் நாட்டிடம் 110 அணுகுண்டுகள் இருக்கின்றன. ஆனால், அவசியம் கருதிக் கூட எந்த நாடும் அணுகுண்டு தயாரிக்கக் கூடாது என்பதில் அமெரிக்கா உறுதியாக இருக்கிறது. அதற்காக, 1968_ம் ஆண்டு அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தத்தை அமெரிக்க உருவாக்கியது. அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா மறுத்துவிட்டது.
ஆனால், இப்போது அமெரிக்கா நீட்டும் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் அணுகுண்டு சோதனை செய்யும் உரிமையை இந்தியா இழந்துவிடுகிறது. இதனை, `குளிக்கப்போய் சேற்றைப் பூசிவரும் செயல்' என்று உடன்பாட்டை அறிந்தவர்கள் எச்சரிக்கிறார்கள்.

இடதுசாரிக் கட்சிகளுடன் தெளிவு ஏற்படாமல் அணுசக்தி ஆணையத்துடன் ஒப்பந்தம் செய்யமாட்டோம் என்று சென்ற ஆண்டு மன்மோகன் சிங் அரசு உறுதி அளித்தது. ஆனால், இப்போது அந்த ஆணையத்துடன் உடன்பாடு காண பிரதமர் அவசரப்படுகிறார்.

அந்த ஆணையத்துடன் உடன்பாடு ஏற்பட்டாலே அமெரிக்க அணுசக்தி உடன்பாடு நிறைவேறிய மாதிரிதான். இந்த ஒப்பந்தம் ஏற்பட்டுவிட்டால் அணுசக்திக்கான மூலப் பொருள் விநியோகம் செய்யும் நாடுகளுடன் உடன்பாடு ஏற்பட அமெரிக்காவே வழி செய்துவிடும். அதன்பின்னர், அமெரிக்க அணுசக்தி உடன்பாடு சிம்மாசனம் ஏறிவிடும். அதன் பின்னர் இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கை அமெரிக்க நலன்களோடு இணைந்து போக வேண்டும். அதனைத் தொடர்ந்து பாதுகாப்பு உடன்பாடு என்ற பெயரால் இந்தியாவை ராணுவக் கூட்டணியில் இழுத்து விடும் வேலை நடைபெறும். எனவே, அமெரிக்க அணுசக்தி உடன்பாட்டின் மேடுபள்ளங்களைச் சுட்டிக்காட்டி நமது அணு விஞ்ஞானிகளே எச்சரிக்கிறார்கள்.

ஆனால், அமெரிக்கா விதித்த காலக் கெடு நெருங்கிக் கொண்டிருக்கிறது. எனவே, எவர் எச்சரித்தாலும் கவலைப்படாமல் அமெரிக்க நலன்களைக் காக்க மன்மோகன் சிங் தயாராகி வருகிறார். இன்னொரு பக்கம் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல் வேகம் பெற்று வருகிறது. புஷ்ஷின் குடியரசுக் கட்சி புஸ்வாணமாவது உறுதிப்பட்டு வருகிறது. காரணம், தமது சாதனை என்று பெருமையோடு புஷ் சொல்லிக் கொள்ள முடியவில்லை. `இந்தியா அணுகுண்டுச் சோதனை செய்வதைத் தடுத்துவிட்டேன். அதற்குத்தான் அணுசக்தி உடன்பாடு' என்று சொல்ல புஷ் பெரும்பாடுபடுகிறார். அவரைக் காப்பாற்ற அணுசக்தி உடன்பாட்டில் கையெழுத்திட மன்மோகன் சிங் அரசு தயாராகிவிட்டது.

அதே சமயத்தில் இடதுசாரிகள் ஆதரவை வாபஸ் வாங்கினாலும் ஆட்சியில் நிலைத்திருக்க முலாயம் சிங் யாதவுடனும் குட்டிக் கட்சிகளுடனும் பேரங்கள் நடைபெறுகின்றன.நம் தேசத்தை அமெரிக்காவிடம் அடகு வைப்பதற்கு எத்தனை பிடிவாதம் பாருங்கள்!

Thursday, January 31, 2008

சென்னையில் எச்சில் துப்பினால் அபராதம்!- சாத்தியப்படுமா?

இனிமேல் சென்னைக்காரர்கள் குப்பை கொட்டுவதில் விழிப்புடன் இருக்க வேண்டும். இல்லை யேல் தண்டத் தொகை கட்ட வேண்டும்.

இது தெடார்பான தீர்மானம் சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. சென்னையை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.



எச்சில் துப்புவது, சிறுநீர் கழிப்பது, மலம் கழிப்பது போன்றவற்றைப் பொது இடங்களில் செய்யக்கூடாது. செய்தால் 50 ரூபாய் தண்டம். குப்பைகளை மட்கும் குப்பை, மட்காத குப்பை என்று பிரித்து அதற்குரிய இடத்தில் கொட்ட வேண்டும். அப்படிச்செய்யா விட்டால் 500 ரூபாய் தண்டம்.

தங்களது வீட்டின் வெளிப் பகுதியை சுத்தமாக வைக்காத வீட்டின் உரிமையாளர்களுக்கு ரூ. 1,000 அபராதம் விதிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.



பான்பராக் போன்ற வஸ்துகளை மென்று சாலைகளை 'ரத்தக் களறியாக்கி' (ரத்தக் கலராக்கி) வைப்போருக்கு இந்த தண்டனை மிக மிக அவசியமான ஒன்று தான். சவுக்கார்பேட்டையிலிருந்து கண்டிப்பாக எதிர்ப்பு கிளம்பும்.

ஆனால், பொதுக் கழிப்பிடங்களை முதலில் மாநகராட்சி சுத்தமாக வைத்தால் தான் சிறுநீர் கழிக்க மக்கள் உள்ளே போவார்கள். கழிப்பிடத்தின் வெளிப்பகுதி உள் பகுதியை விட 'சுத்தமாக' இருந்தால் மக்கள் எப்படி உள்ளே காலடி வைப்பார்கள் என்பதை மாநகராட்சி யோசிக்க வேண்டும்.

பெருமளவில் குப்பைகளைக் கொட்டும் நிறுவனங்கள் அதற்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் குப்பைகளைக் கொட்ட வேண்டும். தவறினால் 500 ரூபாய் தண்டம். குப்பைகளை எரித்தாலும் 500 ரூபாய் தண்டம் விதிக்கப்படும்.

அனைவறும் முன்வந்து ஒத்துழைப்பு தருவார்களா? அல்லது 'அவன நிறுத்த சொல்லு நான் நிறுத்துறேன்' என்பார்கள? இந்த சட்டம், தீர்மானம் எந்த அளவுக்கு சாத்தியப்படும், பொறுத்திறுந்து பார்போம்!.

Saturday, January 19, 2008

படித்ததில் பிடிக்காதது (?)

கீழே உள்ள 2 செய்திகளும் (19- ஜனவரி 2008)இனைய இதழ் ஒன்றில் படித்த செய்தி, இந்த 2 செய்திகளுக்கும் அவர்கள் சார்ந்த மதங்களுக்கும் எந்த தொடர்பும் இருக்காது என்று நம்புகிறேன். -நன்றி தட்ஸ்தமிழ்.காம்

(1).பணத்துக்காக 21 கொலைகள்.. சீரியல் கில்லர் குடும்பத்தோடு கைது



பெங்களூரில் பணத்துக்காக 21 கொலைகள் செய்து தலைமறைவாக இருந்த நபர் 30 ஆண்டுகளுக்கு பின் போலீசில் குடும்பத்துடன் பிடிபட்டுள்ளார்.

இந்தக் குடும்பம் மேலும் பலரையும் கொன்றிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

பெங்களூர், கெம்பே கவுடா நகரை சேர்ந்தவர் ராகவன் (62). ஓய்வு பெற்ற என்ஜீனியரான இவர் ஹென்னூர் எச்.பி.ஆர் லே-அவுட்டில் உள்ள தனது வீட்டை சந்திரகாந்த் சர்மா (48) என்பவருக்கு வாடகைக்கு விட்டிருந்தார்.

சந்திரகாந்த், தனது மனைவி ஹர்ஷா, மகன் மண்டோ சர்மா ஆகியோருடன் வசித்து வந்தார்.

கடந்த 9ம் தேதி சந்திரகாந்த் வீட்டுக்கு வாடகை வாங்கச் சென்ற ராகவன் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த ராகவனின் மகன் மாதவன் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் ராகவனை தேடி வந்த நிலையில், கிருஷ்ணகிரி அருகே அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஒன்று கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அது காணாமல் போன ராகவன் எனத் தெரிய வந்தது.

உடனே கெம்பேகவுடா நகர் போலீசார் ராகவன் இறந்தது குறித்து அவரது வீட்டில் குடியிருக்கும் சந்திரகாந்த் சர்மாவிடம் சாதாரணமாக விசாரித்தனர்.

ஆனால், சந்திரகாந்த் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறவே, அவருடைய வீட்டை போலீசார் சோதனை நடத்தினர்.

அப்போது ராகவனுக்கு சொந்தமான வீட்டுக்குரிய ஆவணங்களை போலியாக தயாரித்து அவருடைய மகன் மாதவனின் கையெழுத்தையும் போலியாக போட்டு தயார் செய்யப்பட்டிருந்த பத்திரம் சிக்கியது.

சந்திரகாந்த் மகா மோசடி பேர்வழி என்பதை உணர்ந்த போலீசார், அவரது மனைவி ஹர்ஷா, மகன் மண்டோ சர்மா ஆகியோரிடமும் விசாரணை நடத்தினர்.

அப்போது ராகவனை கொலை செய்ததை சந்திரகாந்த் குடும்பத்தினர் ஒப்புக்கொண்டனர். அதிர்ச்சியடைந்த போலீசார் இவர்களிடம் மிகத் தீவிரமாக பல தகவல்களை கொட்டினர்.

ராகவனுக்கு சொந்தமான வீட்டை போலி பத்திரம் தயாரித்து ரூ. 1.5 கோடிக்கு ஒருவருக்கு விற்று அதற்கு முன் தொகையாக ரூ.50 லட்சம் அட்வான்சும் வாங்கியுள்ளார் சந்திரகாந்த்.

இது தவிர பெங்களூர் உட்பட பல இடங்களில் போலியாக பத்திரங்கள் தயாரித்து ஏகப்பட்ட நிலங்களை விற்று அதன் மூலம் இதுவரை ரூ.15 கோடி அளவுக்கு மோசடி செய்துள்ளதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பெரிய மோசடி குடும்பம் என்றரீதியில் இவர்களை விசாரித்த போலீசாருக்கு இவர்கள் மேலும் பல கொலைகளையும் செய்திருக்கக் கூடும் என்ற சந்தேகம் தட்டவே, அவர்களை லாக்-அப்புக்கு கொண்டு சென்று முறைப்படி கவனித்தனர்.

அப்போது தான் இவர்களது சீரியல் கொலைகள் வெளிச்சத்துக்கு வந்தன.

21 கொலைகள்..

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் நகரை சேர்ந்த சந்திரகாந்த் பணத்துக்காக கடந்த 1978ம் ஆண்டு முதல் 1981ம் ஆண்டு வரை 20 கொலைகளை செய்துள்ளான் எனத் தெரியவந்தது.

எல்லா கொலைகளையும் நாசிக்கில் தான் செய்துள்ளான்.

அதன் பின்னர் பெங்களூருக்கும் இடம் மாறி வந்து ரியல் எஸ்டேட் தொழிலை ஆரம்பித்துள்ளான். அதில் பலரை ஏமாற்றியுள்ளான்.

தான் வாடைகைக்கு இருந்த வீட்டையும் போலி ஆவணம் கொண்டு விற்க முடிவு செய்தபோது தான் வீட்டின் உரிமையாளர் ராகவன் தடையாக வந்து நிற்கவே அவரையும் கொலை செய்துள்ளான்.

அவரது இந்த கொலைகளுக்கு மனைவியும், மகனும் துணையாக இருந்ததாகத் தெரிகிறது.

இந்தக் கும்பல் மேலும் பலரைக் கொன்றிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-**-*-*-*-*-*-

(2)10 வயது சிறுமியை கற்பழித்த டாக்டர் கைது

மும்பை யில் 10 வயது சிறுமியை கற்பழித்த டாக்டரும் அவருக்கு உதவி செய்த கம்பவுண்டரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மும்பை, கொரகாவ்ன் பகுதியைச் சேர்ந்தவர் டாக்டர் ஆர்.எஸ்.திவாரி. இவர் தனது மருத்துவமனையின் காம்பவுண்டுக்குள் விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமியை உள்ளே அழைத்து வருமாறு கம்பவுண்டர் சங்கர் மோரேவிடம் கூறியுள்ளார்.

சிறுமியை கம்பவுன்டர் மோரே ஏமாற்றி உள்ளே அழைத்து வந்துள்ளார். இதையடுத்து மருத்துவமனைக்குள் வைத்து அந்த சிறுமியை திவாரி கற்பழித்துள்ளார்.

இது குறித்து சிறுமி பெற்றோரிடம் தெரிவிக்கவே, அவர்கள் போலீசில் புகார் கொடுத்தனர்.

போலீசார் டாக்டரை இன்று கைது செய்தனர். கற்பழிக்கப்பட்ட சிறுமி பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

Wednesday, November 7, 2007

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இறந்த எகிப்து மன்னரின் உடல்!





3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இறந்த எகிப்து நாட்டு மன்னரின் பதப்படுத்தப்பட்ட உடல் தோண்டி எடுக்கப்பட்டு பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.

எகிப்து நாடு பிரமிடுகளுக்கு புகழ்பெற்றது. இறந்த மன்னர் களின் உடல்களை பதப்படுத்தி இந்த பிரமிடுகளின் அடியில் வைத்து பாதுகாத்து வருகிறார்கள். இப்படி பதப்படுத்திய உடல்கள் பல நூறு ஆண்டு களுக்கு மேலாக கெடாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

எகிப்து நாட்டின் புகழ் பெற்ற பாரோ மன்னர் டுட் (King Tut) 19 வயதில் மரணம் அடைந்தார். அவரின் வாழ்க்கையும் மரண மும் எகிப்து நாட்டு மக்களால் 100 ஆண்டு காலத்துக்கு பேசப்பட்டது.

அவர் 3 ஆயிரம் ஆண்டு களுக்கு முன்பு இறந்து போனார். அவர் உடல் அவரது கல்லறையில் இருந்து 85 ஆண் டுகளுக்கு முன்பு தோண்டி எடுக்கப்பட்டது.

கெய்ரோவில் இருந்து 500 கி.மீ. தொலைவில் உள்ள லக்கர் பகுதியில் அது புதைக்கப்பட்டு இருந்தது. இதை தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் தோண்டி எடுத்தனர்.

பதப்படுத்தப்பட்ட அவரது முகத்தில் தங்க கவசம் மற்றும் சில மூலிகைப் பொருள்களால் சுற்றப்பட்டு இருந்தது. அதை தனியாக பிரித்து எடுக்கும் போது பதப்படுத்தப்பட்ட உடலுக்கு சில இடங்களில் சேதம் ஏற்பட்டது.

கல்லறையில் தோண்டி எடுத்தபோது பதப்படுத்தப்பட்ட உடல் 18 ஆண்டுகளில் உடைந்தது. அவற்றை விஞ்ஞானிகள் ஒன்று சேர்த்தனர். பிறகு அது சி.டி.ஸ்கேன் மூலம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

இது பொதுமக்கள் பார் வைக்கு வைக்கப்பட்டுள்ளது. தரைக்கு அடியில் அமைக் கப்பட்ட அறையில் இது பாது காப்பாக வைக்கப்பட்டுள்ளது. இதை ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு வருகிறார்கள்.

இது பிறகு லண்டனில் காட்சிக்கு வைக்கப்படுகிறது. பிறகு அமெரிக்காவில் உள்ள டல்லாஸ் மியூசியத்திலும் காட்சிக்கு வைக்கப்படுகிறது.

8 கை, கால்களுடன் பிறந்த குழந்தைக்கு வாழ்வு தந்த டாக்டர்கள்!


பீகாரில் அராரியா எனும் இடத்தைச் சேர்ந்த இரண்டு வயது லட்சுமி, முழுமை அடையாத மற்றொரு உடலுடன் ஒட்டிப் பிறந்த ஒரு பெண் குழந்தை ஆவார். அவ்வாறு பயனின்றி ஒட்டியுள்ள உடம்பின் மிகை உறுப்புகளை நீக்குவதற்கு, 40 மணி நேர அறுவை சிகிச்சையை, பெங்களூரின் புறப்பகுதியில் உள்ள நாராயண சுகாதார மாநகரில் உள்ள ஸ்பார்ஷ் மருத்துவமனையில் குழு சிகிச்சை தொடங்கினர்.

இது ஒரு மிகச் சிக்கலான, அதி நுட்பத் திறன் தேவைப்படும் அறுவை எனக்கூறப்படுகிறது. இரண்டு உடல்கள் ஒட்டியிருந்தாலும், ஒன்றுக்குத்தான் தலை இருக்கிறது. ஆனால், நான்கு கைகள், நான்கு கால்கள் இருக்கின்றன. இந்தக் குழந்தை இந்த எட்டு உறுப்புகளையும் இயக்குகிறது.

மருத்துவமனையின் தலைவர் டாக்டர் ஷரன்படீல் தலைமையில், குழந்தை மருத்துவர்கள், நரம்பியல், பிளாஸ்டிக், நுண்ணிய நாளங்கள் ஆகியவற்றில் அறுவை சிகிச்சை செய்யும் வல்லுநர் குழு சிகிச்சையில் ஈடுபட்டிருக்கிறது.

நேபாள எல்லைக்கு அருகில் உள்ள, பிகாரைச் சேர்ந்த ஒரு கிராமத்தின் ஏழைக் குடும்பக் குழந்தைக்கு இந்தச் சிக்கலான மருத்துவத்தைச் செய்ய அதை ஒர் அறை கூவலாக ஏற்று, மருத்துவமனை முன் வந்துள்ளது. இத்தகைய சிகிச்சை இந்தியத் துணைக் கண்டத்தில் இதுவே முதல் முறையாகும். இதற்கு ரூ.25 லட்சம் ரூபாய் செலவாகும். இதை இலவசமாக மருத்துவமனை செய்துள்ளது.

கால்களும், தண்டுவடமும் இணையும் எலும்பில் இரு உடம்புகள் ஒட்டியுள்ளன. 50 ஆயிரம் பிறப்புகளில் ஒன்றுக்கு இக்குறை ஏற்படலாம். கல்லீரல், குடல், சிறுநீர்ப் பாதை, பிறப்பு உறுப்புகள், நாளங்கள், எலும்பு தசை ஒட்டிய பகுதிகள் ஆகிய உடற் கூறுகள் தொடர்பாக இந்தச் கிகிச்சை செய்யப்படுகிறது.

ஒரு மாதத்திற்கு முன்பு மருத்துவமனைக்கு வந்த குழந்தை லட்சுமி, சரியான உணவின்றி, நலிந்தும், ரத்த சோகையுடனும் இருந்ததால், அக்குறைகளைப் போக்கி, சிகிச்சை வெற்றி என அறிவிக்கப்பட்டுள்ளது

தற்போது லட்சுமி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளார். அங்கு சில நாட்கள் டாக்டர்கள் அவரது உடல் நிலையைக் கண்காணிப்பார்கள்.

இனி லட்சுமி வழக்கமான பெண் குழந்தையைப் போல அனைத்து நலமுடனும் வாழ வழி பிறந்துள்ளது என்றார்.

தங்களது மகளுக்குப் புது வாழ்வு கொடுத்துள்ள டாக்டர்களுக்கு லட்சுமியின் பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி கூறினர். தங்களது மகளுக்குப் புது வாழ்க்கை கொடுத்த டாக்டர்களுக்கும், கடவுளுக்கும் நன்றி சொல்வதாக லட்சுமியின் தந்தை சாம்பு கூறினார்.

லட்சுமி விரைவில் முழு குணமடைய நாமும் பிரார்த்திப்போம்.